தமிழக மழை - வெள்ளத்தின்போது களத்தில் செயல்பட்டதற்காக, நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த மூன்று சிறுவர்களுக்கும் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' விருது வழங்கி என்.டி.டி.வி கவுரவித்தது.
இந்தியன் ஆஃப் தி இயர் 2015' விருது பெற்ற அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூன்று சிறுவர்களும் இந்தியாவை வழிநடத்துவார்கள் என்று தருண் விஜய் எம்.பி. நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக மழை - வெள்ளத்தின்போது களத்தில் செயல்பட்டதற்காக, நாட்டுக்கு சேவையாற்றியவர்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூன்று சிறுவர்களுக்கும் 'இந்தியன் ஆஃப் தி இயர் 2015' விருது வழங்கி என்.டி.டி.வி கவுரவித்தது.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய் இந்த மூன்று சிறுவர்களையும் இன்று (புதன்கிழமை) சென்னையில் சந்தித்து கவுரவப்படுத்தினார்.
அதற்குப் பிறகு தருண் விஜய் கூறியதாவது:
''ஏழைகள்தான் இந்தியாவின் தலைவர்கள். இந்தியாவுக்கு வெளிச்சம் பாய்ச்சுபவர்கள் அவர்கள்தான். அந்த விதத்தில் அசோக், அர்ஜுன், ஆறுமுகம் ஆகிய மூன்று சிறுவர்களும் என்னையும், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான சிறுவர்களையும் ஊக்கப்படுத்துகிறார்கள்.
திருவள்ளுவரைப் பின்பற்றும் நான் இந்த மூன்று சிறுவர்களுக்கும் தரமான கல்வி, விடுதி வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவேன். அதற்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்வேன்.
விரைவில் இந்த மூன்று சிறுவர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்துச் சென்று கவுரவப்படுத்த உள்ளேன்.வருங்காலத்தில் தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாகி, இந்தியாவை இவர்கள் வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என தருண் விஜய் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக