பிப்.16-ல் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்
வரும் 16-ம் தேதி (பிப்ரவரி 16) தமிழக இடைக்கால பட்ஜெட்தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.2.2016-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.மேலும், அன்று காலை 11.00 மணிக்கு 2016-2017-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.2.2016-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.மேலும், அன்று காலை 11.00 மணிக்கு 2016-2017-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக