பிப். 20 வரை தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்: சபாநாயகர்
தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 20 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.இதைத்தொடர்ந்து இக்கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வு குழு கூடி விவாதித்தது.கூட்டத்தில்,
பேரவைக் கூட்டத் தொடரை பிப். 20 ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் கூறினார்.நாளை காலை பேரவைக் கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றார். இறுதி நாளான பிப். 20 ஆம் தேதி பட்ஜெட் பதிலுரை இடம் பெறும் என்றார் சபாநாயகர்.
கருத்துகள்
கருத்துரையிடுக