தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், இன்றுமுதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனால், போராட்டத்தைத் தவிர்க்க, அரசு ஊழியர்கள் சங்கங்களை, நேற்று, அமைச்சர்கள், அவசர அவசரமாக பேச்சுக்கு அழைத்து, சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.கோரிக்கைகள் பலவற்றை வலியுறுத்தி, 68 சங்கங்கள் ஒன்றிணைந்த, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், தமிழக அரசு, அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. எனவே, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதேபோல் வணிகவரித்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என, பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் குதித்தனர். தனித்தனியே...: இதனால், அரசு பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டது. தாமதமாக விழித்துக் கொண்ட அரசு, போராட்ட அறிவிப்பு வெளியிட்ட சங்கங்களுடன், சமரசம் செய்ய முடிவு செய்தது.மூத்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் அடங்கிய, ஐவர் அணியினர், தலைமைச் செயலர் ஞானதேசிகன் ஆகியோ...