இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TNPSC VAO KEY

VAO MATHS KEY ANSWER CLICK

TNPSC:VAO Exam-2016 Answer Keys Download

VAO KEY ANSWER CLICK VIDIYAL

பெயரின் முதல் எழுத்து(Initial)பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்,மற்றும் விவரங்கள்.

படம்

CPS பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைக்கான படிவங்கள் வெளீயீடு

படம்

Tamil Unicode writer மாணவர்கள் பெயர் தமிழில் எழுத

Tamil Unicode writer  மாணவர்கள் பெயர் தமிழில் எழுத

photoshop tips for emis போட்டோ ஷாப்பை பயன்படுத்தி நாம் 200 x 200 pixels மற்றும் 50 KB க்கு குறைவாக நூற்றுக்கணக்கான போட்டோக்களை எவ்வாறு அளவு மாற்றம் செய்யலாம் என்பதற்கான எளிய வழி......

படம்

GO.59 Dt.22.02.16PENSION-CPS-Settlement of accumulation under CPS in respect of CPS Subscribers retired/resigned,died & terminated from service-Orders Issued.

படம்

EMIS LOGIN LINK

EMIS LOGIN LINK CLICK HERE

அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு

கடந்த 19–ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர்ஜெயலலிதா, பேரவை விதி 110–ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் குடும்ப நல நிதி திட்டத்தின் கீழ் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.30–ல் இருந்து ரூ.60 என்று உயர்த்தப்படுகிறது. அதுபோல அந்த ஊழியர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும் தொகை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில்,நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் அரசாணை பிறப்பித்துள்ளார். அதில், முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பு 1.2.16 அன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், அதே தேதியில் மற்றொரு அறிவிப்பையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவன அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர் ஆகியோருக்கு குழு காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது. ஊழியரின் மரணத்தை அடுத்து, இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் க...

குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது.பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச், 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி., சார்பில் விஜிலென்ஸ், ரயில்வே, வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பதவிகளை பொறுத்து, 18 முதல், 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் ஆட்-கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பகட்டணமாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணம், வயது வரம்பில் எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சலுகை உண்டு. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.ssconline2.gov.in அல்லது http://sscregistration.nic.in.

NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD..

NMMS HALL TICKET CLICK HERE

ஜாக்டோவை உடைத்த அரசியல்: கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பில்லையா?

படம்

பி.இ. சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்

பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. போலிச் சான்றிதழ்கள் குறித்த சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனால், சான்றிதழ் உண்மைத் தன்மையை அறிவதற்கான வசதி இருப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழக இணையதளத்தில் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். தேவைப்படுபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து சான்றிதழ் உண்மைத் தன்மையை அறியலாம் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்'ஒழுங்கு நடவடிக்கையும் பாய்கிறது : SR - ல் பதிவு செய்ய உத்தரவு

பிப்., 10 முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட்டு, வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு, ஒரு வார சம்பளத்தை பிடிக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து, சில ஆசிரியர் சங்கங்களும், சில கல்வி அலுவலக ஊழியர் சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, வேலைக்கு வராமல், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள், ஆசிரியர்களிடம், எந்த விளக்கமும் கேட்காமல் சம்பளத்தை பிடிக்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆசிரியர்களின் பணி புத்தகத்திலும் அவர்கள், ஸ்டிரைக்கில் ஈடுபட்ட தகவலை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் பங்கேற்றவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பதவி உயர்வு மற்றும் பணப்பலன் சலுகைகளை ரத்து செய்வது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

பள்ளிக்கூடங்களில் உளவியல் நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், பாரிமுனையை சேர்ந்த வக்கீல் எ.ரங்கநாயகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- பாலியல் கொடுமைகளை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பள்ளிக்கூடங்களில், பாலியல் கொடுமை குறித்து விளக்கம் அளிக்க உளவியல் நிபுணர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும். குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்து புகார் செய்ய 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை மத்திய அரசு அறிவித்திருந்தாலும், அந்த தொலைபேசி எண் பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலர், தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை செயலர், தமிழக சமூக நலத்துறை முதன்மை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆகியோர் பதில் மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதி...

TNPSC VAO Exam 2016 Hall Ticket Download

TNPSC VAO Exam 2016 *.Application Print - Click Here *.Download Admit Card - Click Here *.Rejection List - Click Here

இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் விதி 110 இன் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள்.

படம்

CPS க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் ஓர் ஒப்பீடு -

CLICK HERE-CPS VS TPF /GPF DIFFERENCE

ஜாக்டோ 26 முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு.

படம்

CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதம் வருமாறு: குணசேகரன் (இந்திய கம்யூ னிஸ்ட்): புதிய ஓய்வூதியத் திட் டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால், இதேதிட்டம் நாடாளுமன்றத்தில் 2004-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்து அதிமுக வாக்களித்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் படும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் காரண மாக ஓய்வூதியத் தொகைக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் தான் பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி எங்கு இருக்கிறது?நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம்:அந்தப் பணம் அரசு கஜா னாவில்தான் இருக்கிறது. குணசேகரன்:அரசு ஊழியர் களிடம் பிடித்தம் செய்த பணம், பங்கு வர்த்தகத்தில் முதலீடு...

PF., வட்டி அதிகரிப்பு

''நடப்பு நிதியாண்டில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 8.75 சதவீதத்தில் இருந்து, 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது,'' என,மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சககட்டுப்பாட்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன், மத்திய அறங்காவலர் குழுமத்தின், 211வது கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு இதை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துறை செயலர் சங்கர் அகர்வால், வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சமாரியா பங்கேற்றனர்.

NMMS HALL TICKET

NMMS HALLTICKET

NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD..

NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD click here ...

பிப். 20 வரை தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்: சபாநாயகர்

தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 20 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.இதைத்தொடர்ந்து இக்கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வு குழு கூடி விவாதித்தது.கூட்டத்தில், பேரவைக் கூட்டத் தொடரை பிப். 20 ஆம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் கூறினார்.நாளை காலை பேரவைக் கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றார். இறுதி நாளான பிப். 20 ஆம் தேதி பட்ஜெட் பதிலுரை இடம் பெறும் என்றார் சபாநாயகர்.

ஏப்ரல் 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு; ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்

ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்கள் ஏப்ரல் 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மார்ச் 11-ந்தேதி அரசிடம் வேலைநிறுத்த நோட்டீசு வழங்குகின்றனர். 36 அம்ச கோரிக்கைகள் இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளரும், மத்திய அரசு ஊழியர்களின் தென்பகுதி கூட்டு போராட்ட குழுவின் தலைவருமான என்.கண்ணையா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை மாற்ற வேண்டும். ரெயில்வே, பாதுகாப்பு, தபால் உள்பட மத்திய அரசின் துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை கைவிட வேண்டும் உள்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்கள் வரும் ஏப்ரல் மாதம் 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். வேலைநிறுத்தம் குறித்து கடந்த 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை எஸ்.ஆர்.எம்.யு. நடத்திய ரகசிய வாக்கெடுப்பில் 90.07 சதவீதம் ரெயில்வே ஊழியர்களும், அகில இந்திய அளவில் 95.6 சதவீதம் ரெயில்வே ஊழியர்களும் போராட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 45 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தம் த...

2016 - 17 பட்ஜெட் : பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்

பிப்.16-தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:2016–2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வித் துறைக்கென 24,820 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 221 புதிய ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளதோடு, 112 ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பத்தாவது மற்றும் பன்னிரெண்டாவது வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 2015–ம் ஆண்டில் முறையே, 92.90 சதவீதம் மற்றும் 90.60 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2016–2017ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக 2,329.15 கோடி ரூபாயும், தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காக 1,139.52 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தரமான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 2011 ஆம் ஆண்டு முதல், இந்த அரசு மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப்...

NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD..

NMMS EXAM HALL TICKET 2016 DOWNLOAD click here ... NMMS EXAM NOMINAL ROLL NMMS EXAM - 2016 NOMINAL ROLL DOWNLOAD (CEO LEVEL)

PG TRB ENGLISH STUDY MATERIALS UNIT-1 & 9

PG TRB ENGLISH STUDY MATERIALS UNIT-1 & 9...

வருவாய் துறை அதிகாரிகளை தேட வேண்டிய அவசியமில்லை:டூ'ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்!

இன்று முதல், இணையத்தில் (ஆன் -லைன்) பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணி துவங்குவதால், அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய சூழல், விண்ணப்பதார்களுக்கு ஏற்படாது என, வருவாய் துறை தெரிவித்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 தாலுகா அலுவலகங்களில்,3,512 கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களில் இருக்கும்புஞ்சை, நஞ்சை மற்றும் நத்தம் ஆகிய நிலங்களின், பட்டா பெயர் மாற்றம்,தாலுகா அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்தன. விளை நிலங்களுக்கு, கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையிலும், வீட்டுமனைகளை உட்பிரிவுகளாக பிரிக்க, நில அளவையர் (சர்வேயர்) பரிந்துரையிலும், தாசில்தாரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பட்டா பெயர் மாற்ற வரும் விண்ணப்பதாரரை, வருவாய் துறைஅதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும்; குறித்த நேரத்திற்குள் பெயர் மாற்றுவதில்லை எனவும், பெயரை மாற்ற பணம் கேட்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இன்று முதல்...இதை தவிர்க்க, மாவட்ட வருவாய் துறை, இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக, நஞ்சை, புஞ்சை நிலங்களின் வகையினங்களை, 'அ' பதிவேட்டில் இருந்து, இணையதளத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள், ...

பிளாஸ்டிக் பாட்டில்களில் பொம்மைகள்: சேலம் சகோதரர்களின் புதிய முயற்சி

சேலம் உதவும் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சகோதரர்கள் இணைந்து, பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் அலங்காரப் பொம்மைகளை செய்து மாற்றுமுறை பயன்பாட்டு பொருளாக பிளாஸ்டிக்கை மாற்றியுள்ளனர். சேலம் அம்மாப்பேட்டை மாரியப்பா நகரில் வசித்து வரும் சகோதரர்கள் மணிவண்ணன் மற்றும் கண்ணன். பட்டதாரிகளான இவர்கள் ‘உதவும் நண்பர்கள் அமைப்பின்’ மூலம் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் டியூஷன் படிக்க வரும் இளைய தலைமுறையினருக்கு, அன்றாட பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் பயன்பாட்டால் இயற்கை வளம் அழிவின் எல்லைக்கு சென்று கொண்டிருப்பதை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருமண விழா, வீட்டு விசேஷ நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டு வீதிகளில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து தங்களிடம் டியூஷன் படிக்க வரும் மாணவ, மாணவியரை கொண்டு பொம்மைகள், மரம், செடி, கொடி, டைனோசர், ரோபோ, குழந்தைகளுக்கான குடில், அலைபேசி சார்ஜர் போடும் டப்பா, பூ ஜாடி, அப்துல்கலாம் உருவம், காலணிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை த...

Tamil Nadu Open University B.Ed.,B.Ed(SE) Term End Examination Revaluation 2016 Results Published

Tamil Nadu Open University B.Ed.,B.Ed(SE) Term End Examination Revaluation 2016 Results Published Download in www.tnou.ac.in

தூய்மை நகரங்கள் தரவரிசை பட்டியலில் திருச்சிக்கு 3-ம் இடம்

'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சிக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. கடந்த முறை 2-வது இடத்தில் இருந்தது நினைகூரத்தக்கது. இந்தியாவில் தூய்மையான நகரங்கள் பட்டியலை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார். அந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த நகரங்கள்: 1. மைசூர் 2. சண்டிகர் 3. திருச்சி 4. டெல்லி 5. விசாகபட்டிணம் 6. சூரத் 7. ராஜ்கோட் 8. கேங்டாக் (சிக்கிம்) 9. பிம்ப்ரி சிந்துவாத் (மகாராஷ்டிரா) 10. மும்பை இந்தப் பட்டியலில், மதுரை 34-வது இடத்தையும், சென்னை 36-வது இடத்தையும் பிடித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை விளம்பரப்படுத்த முக்கிய பிரமுகர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதன்படி நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் பலர் பங்கேற்று செயல்படுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தூய்மையான நகரங்கள் குறித்த ஆய்வை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நடத்தி தரவரிசை பட்டியலை வெ...

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் தேர்வு செய்ய முடிவு

படம்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு விரைவில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடித்தேர்வு மூலமாகவும், 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (உடற் கல்வி இயக்குநர்-கிரேடு-1 உள்பட) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வுசெய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த காலியிடங் கள் 2013-14, 2014-15-ம் கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்கள் ஆகும். இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி இயக்குநர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய நடை முறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். எனவே, இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெகுவிரைவில் வெளியிடும் என்று எதிர...

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மீண்டும் மறியல் போராட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடி வருகின்றனர்.சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு துறை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 12–ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சுமார் 60 ஆயிரம் பேர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.இதையடுத்து சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக இருந்ததால் அரசு ஊழியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சி கூட்டங்களை நடத்தினார்கள்.இந்த நிலையில் அரசு ஊழியர் சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி ஆதரவு அளித்தது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தை சேர்ந்த மோசஸ் அறிவித்து இருந்தார். அரசு ஊழியர்களின் போராட்டம் இன்று மேலும் தீவிரமாகிறது.மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அரசு ஊழியர் ச...

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.நாளை பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சில முக்கிய அறிவிப்புகளை இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று நாளை காலை சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அனேகமாக இந்த வாரம் முழுவதும் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விட்டதால் அனைத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் ...

3 லட்சம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' பணிகள் ஸ்தம்பிப்பு

மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு நடத்தியும் சிக்கல் தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர். மூன்று லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால், அரசுப் பணிகள் ஸ்தம்பித்தன.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் மற்றும் பல துறை சார்ந்த சங்கங்களும் போராடி வந்தன. அப்போது, ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை அரசு செயல்படுத்தாததாலும், ஆட்சிக்காலம் முடிய உள்ளதாலும், தற்போது போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இதற்கு தீர்வு காண, மூத்த அமைச்சர்கள் இடம் பெற்ற, ஐவர் அணி பேச்சு நடத்தியது. ஆனால், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை.'அரசாணைகள் தர நீங்கள் முயற்சியுங்கள்; நாங்கள் போராட்டத்தை துவக்குகிறோம்'எனக்கூறி, அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று திட்டமிட்டபடி, காலவரையற்ற ஸ்டிரைக் துவங்கியது.இந்த சங்கத்தில், வருவாய் துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி என...

தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் -அமைச்சர்கள் சமரச முயற்சி

தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், இன்றுமுதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனால், போராட்டத்தைத் தவிர்க்க, அரசு ஊழியர்கள் சங்கங்களை, நேற்று, அமைச்சர்கள், அவசர அவசரமாக பேச்சுக்கு அழைத்து, சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.கோரிக்கைகள் பலவற்றை வலியுறுத்தி, 68 சங்கங்கள் ஒன்றிணைந்த, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர், தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனினும், தமிழக அரசு, அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. எனவே, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதேபோல் வணிகவரித்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் என, பல்வேறு அமைப்பினரும், போராட்டத்தில் குதித்தனர். தனித்தனியே...: இதனால், அரசு பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டது. தாமதமாக விழித்துக் கொண்ட அரசு, போராட்ட அறிவிப்பு வெளியிட்ட சங்கங்களுடன், சமரசம் செய்ய முடிவு செய்தது.மூத்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் அடங்கிய, ஐவர் அணியினர், தலைமைச் செயலர் ஞானதேசிகன் ஆகியோ...

பிப்ரவரி 01 ம் தேதி நடைபெற்ற போராட்டத்திற்கு ஊதியம் பிடிக்கப்படுவதில்லை-இயக்குநர்

ஜாக்டோவின் இன்றைய பேச்சுவார்த்தையில் இயக்குனர் அளித்த தகவல்.. பிப்ரவரி 01 ம் தேதி நடைபெற்ற போராட்டத்திற்கு ஊதியம் பிடிக்கப்படுவதில்லை-இயக்குநர்

ஜாக்டோவின் கோரிக்கைகள் முதல்வர் பரிசீலித்து பட்ஜெட்டில் அறிவிப்பார் என அமைச்சர்கள் குழு உறுதிமொழி; இதையடுத்து அடுத்த கட்ட முடிவு குறித்து பிப்ரவரி 16 அன்று கூட ஜாக்டோ முடிவு

அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கை வைக்கிறது, பட்ஜெட்டில் கோரிக்கைகள் இடம் பெறவில்லை எனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பிப்ரவரி 16ந்தேதி அறிவிக்கப்படும் என ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாக்டோ பேச்சுவார்த்தை முழு விவரம்-தமிழ்நாடுஆசிரியர் கூட்டணிபொதுசெயலர் செ.முத்துசாமி அவர்களின் அறிக்கை

ஜாக்டோ தரப்பில் 15 அம்சக்கோரிக்கைகளை, ஒவ்வொரு கோரிக்கையாக ஒவ்வொரு சங்கபிரதிநிதிகள் தெளிவாக எடுத்துக்கூறினர். அப்போது கல்வித்துறை செயலர் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டார். அதேசமயம் முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சர் அவர்களும் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலராகிய நான் கோரிக்கையை விளக்கி பேசும் போது தலைமைச்செயலர் ஏன் இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி.. ஏன் எனில் அவர் ஏற்கனவே கல்வித்துறை, மற்றும் நிதித்துறை செயலராக இருந்தவர் என்றும் தற்போது அரசின் முதன்மை செயலராக இருப்பதால் பங்கெடுக்காதது குறித்து கவலையாக உள்ளதாகவும் கூறினேன் .அதற்கு அரசு தரப்பில் அவர் முக்கிய வேலையாக சென்றிருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பெருமக்கள் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக சுமார் 2 மணி நேரம் கேட்டனர்.ஜாக்டோ சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு முடிவு என்ன என்று கேட்ட போது. நிதியமைச்சர் கல்வி அமைச்சரை பதில் கூறுமாறு அழைத்தார்.அதற்கு கல்வி அமைச்சர் நிதியமைச்சரே இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ளதால்...

மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது பிஎஃப் கணக்கும் - அதன் பலனும் மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது சம்பளம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது.

மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது பிஎஃப் கணக்கும் - அதன் பலனும் மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும் தங்களது சம்பளம் எவ்வளவு என்று துல்லியமாகத் தெரியாது. சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும் என்று சொல்வார்களே தவிர, மொத்த சம்பளம் எவ்வளவு? அதில் என்ன என்ன பிடித்தம் செய்கிறார்கள்? எதற்கு பிடிக்கிறார்கள்? என்பது தெரியாது. வருமான வரிக்காக பிடிக்கிறார்களா? அல்லது வருங்கால வைப்பு நிதிக்காக (பிஎப்) பிடிக்கிறார்களா? என்பதைகூட அறிந்து கொள்ள மாட்டார்கள். பிஎப் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும் எவ்வளவு பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். தவிர தங்களது பிஎஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது? அதன் பலன் என்ன? என்பது குறித்து விவரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். இந்த சந்தேகங்களை நீக்கும் சிறு முயற்சி இந்த கட்டுரை. எவ்வளவு பிடிக்கிறார்கள்? *************************************** பணியாளர்களின் வருங்கால பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி. வாங்கும் சம்பளத்தில் பணியாளர்களிடம் இருந்து 12 சதவீத தொகை பிடித்தம் செய் யப்பட...

பிப்.16-ல் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

வரும் 16-ம் தேதி (பிப்ரவரி 16) தமிழக இடைக்கால பட்ஜெட்தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.2.2016-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்.மேலும், அன்று காலை 11.00 மணிக்கு 2016-2017-ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

கல்வி வளர்ச்சி நாள் - அலுவலர்களின் அதிகாரங்களில் மாற்றம் ஏற்படுத்தி அரசாணை வெளியீடு

படம்
மேலும் விவரங்களுக்கு »

BAHRATHIDASAN UNIVERSITY M.Ed ADMISSION 2016-17 NOTIFICATION

CLICK HERE - BAHRATHIDASAN UNIV M.Ed APPLICATION

FLASH NEWS : ஜேக்டோ உயர்மட்டக்குழுவிற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு - 5 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை

ஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்களுக்கு - 15 அம்ச கோரிக்கைகள்குறித்து பேசிட. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த சந்திப்பு நாளை (09.02.2016) மாலை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் மின்சாரத்துறை அமைச்சர் திரு.நத்தம் விஸ்வநாதன்அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. வீரமணி அவர்கள் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் திருமதி.சபிதா அவர்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.கண்ணப்பன் அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன்ஆகியோர் அரசு சார்பில் பங்கேற்கின்றனர்.

JACTO SIVAGANGA PHOTOS

படம்