சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகை மாநில அரசு திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.ரூ.10 ஆயிரம் உதவித்தொகை
மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.இ.) சார்பில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகிய உயர் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.எனவே சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மராட்டிய அரசு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கதொகை வழங்க திட்டமிட்டது. இந்த திட்டத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.பயிற்சி மையங்கள்
இதற்காக மும்பை, நாக்பூர், கோலாப்பூர், அமராவதி, அவுரங்காபாத், நாசிக் ஆகிய பகுதிகளில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இந்த புதிய திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.23.46 கோடி கூடுதல் செலவாகும் என்று அரசு அறிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Lesson Plan For Teachers