ஆசிரியர் பொது மாறுதல் வதந்திகளை நம்பாதீர்
ஆரம்பிச்சிட்டாங்க
இவங்களே
அரைகுறையா
அதி மேதாவித்தனமா
அதை சொல்றேன்
இதை சொல்றேன் அப்படி
இப்படி
அப்படின்னு அங்க சொல்றாங்க
இங்க சொல்றாங்க
ஆலோசனையில் இருக்குது
அரசாணையை வெளிவர இருக்குது
அப்படின்னு இவங்க மனசுல வந்தத
இஷ்டத்துக்கு விதிமுறைகளை வகுத்து
அரசு கையில் கொடுத்துட்டு,
அப்புறம் அரசு செய்யுது,
அரசு செய்யுதுன்னு புலம்புவார்கள்.
இனி எந்த கவர்மெண்ட் வந்தாலும் வாட்ஸ்அப் வதந்திகள் பரப்பும் கல்வி சார் வலைதளங்கள் இருக்கும் வரை
ஆசிரியர்களுக்கு நன்மை வரப்போவதில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம் அனைத்து கல்விசார் வலைத்தளங்களையும் எல்லா குழுக்களிலிருந்தும் வெளியேற்றுங்கள்.
அப்பொழுதுதான் உண்மையான தகவல்கள் அரசாணைகள் வரப்பெற்று நிம்மதியாக இருக்கலாம்.
இல்லையேல் இவர்களே அரசாணைகளை உருவாக்குபவர்கள் ஆக மாறி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி இப்படி செய் அப்படி செய் இதுபோல் செய்வது.
அது போல் செய் என்றும்
புதிது புதிதாக படிவங்களையும் பதிவேடுகளையும் இவர்களே உருவாக்கி அதனை பரப்பி அதனை பின்பற்ற வைப்பதும் அதன்பின் அப்படி இப்படி கஷ்டப்படுகிறோம் என்று ஆசிரியர்கள் மூலம் கோரிக்கை வைப்பதுபோல் கோரிக்கைகளை பதிவிடுவது இவர்களே
சங்கத்திற்கு ஒரு ஈடுபாடும் இல்லாத ஒருவர் உடனே அனைத்து சங்க மாநில பொறுப்பாளர்களும் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்
அவரின் பின்னணியைப் பார்த்தால் எந்த சங்கத்திலும் சந்தா செலுத்தி உறுப்பினராகவோ அல்லது எந்த இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளின் சந்தாதாரராகவோ இருக்க மாட்டார் என்பது நிச்சயம்
ஆனால் இவர் நினைப்பதையெல்லாம் எல்லா சங்க மாநில மாவட்ட வட்டார இயக்கவாதிகளும் இவருக்கு செய்ய வேண்டும் என்று எண்ணுவார் .
எனவே அமைதி காப்பீர் இல்லையேல் அவஸ்தைப்படுவோம் என்பது மட்டும் நிச்சயம்
சும்மா இருங்கப்பா
TAMS
கருத்துகள்
கருத்துரையிடுக