தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் யார்? - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் வகுத்திருந்த வரையறைகள்
பதினைந்தாவது தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான தேர்தலில் தமிழகம் திமிலோகப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், 1000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டை தமிழர்கள் கடைபிடித்த தேர்தல் நடத்தை விதிகளை புரட்டிப் படித்தால் பிரமிக்க வைக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ளது வைகுந்த பெருமாள் கோயில். இந்தக் கோயிலில், கி.பி.907-ல் பராந்தக சோழன் 2 கல்வெட்டுகளை வைத்திருக்கிறான். பராந்தகனின் 12 மற்றும் 14-ம் ஆட்சி ஆண்டுகளில் வைக்கப்பட்ட இந்த கல்வெட்டுகளில், பண்டைக் காலத்தில் வழக்கத்தில் இருந்த குடவோலை தேர்வு முறை, வேட்பாளர்கள் தகுதி மற்றும் தேர்வு நடத்தும் முறைகள் தெளிவாக விளக்கப்பட் டுள்ளன. இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய வரலாற்று ஆய்வாளரும் சேலம் ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ஜே.ஆர்.சிவராம கிருஷ்ணன், “மன்னராட்சியில் உள்ளாட்சி நிர்வாகங்கள்தான் மக்களோடு நேரடி தொடர்பில் இருந்திருக்கின்றன. அதனால், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒழுக்க நெறி தவறாதவர்களாகவும் நாணயமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் மன்னர்கள் மிகக் கவனமாக இருந்திருக்கிறார்கள். 30 உறுப்பினர்க...