School Morning Prayer Activities - 31.08.2018 ( TAMS Dail Updates... )

School Morning Prayer Activities - 31.08.2018 ( TAMS Dail Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள்:41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. உரை : இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். பழமொழி : Barking dogs seldom bite குரைக்கின்ற நாய் கடிக்காது பொன்மொழி : மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும். - பெர்னார்ட்ஷா . இரண்டொழுக்க பண்பாடு : 1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன். 2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை. பொது அறிவு : 1. ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன? புவி உச்சி மாநாடு 2.ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது? கர்நாடகா நீதிக்கதை : சமயோசித புக்தியால் உயிர் தப்பிய குரங்கு ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்...